ஒருவனை புலி அடிப்பது ‘பரிதாபம்’ மட்டும் அல்ல. அது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. அந்த ‘வரலாற்றில்’ பங்குகொள்ளவும் பதிவுசெய்யவும் சாமானியர் துடிக்கிறார்கள். சொல்லிச்சொல்லி பெரிதாக்குகிறார்கள். அங்கே நின்ற ஐம்பதுபேரிடம் கேட்டால் நூறு பாடபேதங்களாக அக்கதை கிடைக்கும். இப்படித்தான் நினைவுகள் வரலாறாகின்றன.
அத்துடன் அந்த தீவிரநிலைகளில் தங்களை வைத்துப்பார்த்துக் கற்பனைசெய்கிறார்கள். அந்த அனுபவங்களில் மானசீகமாக திளைக்கிறார்கள். அவர்களின் உலகம் விரிகிறது
ஆக அதெல்லாம் வக்கிரங்கள் அல்ல. அடிப்படை மானுட இயல்புகள். என்றும் உள்ளவை.மனிதர்கள் அப்படித்தான். சாமானியர்கள், அசாதாரணமான விஷயங்களுக்காக ஏங்குபவர்கள்.
ஜெ
No comments:
Post a Comment